ஜிம்பளா மேளம்
இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ்ப்பகுதியிலும் தவில் போன்று ஆனால் அதைவிட நீளம் குறைந்த இருமுகத் தோலிசைக் கருவியே ஜிம்ப்ளா மேளம் எனப்படும். இக்கருவியின் இருபுறமும் இருவித ஓசையை எழுப்புவது போல் அமைந்திருக்கும். எருதுகட்டுக்கு மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலை தற்போது கோவில்களில் நடைபெறும் பொங்கல் விழா, ஊர்வலங்கள், சாவு ஆகியவற்றிலும் நிகழ்த்தப்படுகிறது.