பாவ, புண்ணியம் இருக்கிறதா, உண்மையா, கட்டுக்கதையா?
ஃசதானந்தன்
பாவ, புண்ணியம் குறித்து தற்போது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நமது மகான்கள், முன்னோர்கள் கூறியுள்ளது நோக்கத் தக்கது. இதை பாமரனுக்கும் புரியும்படி பலர், பலவிதமாக சொல்லி இருக்கிறார்கள்.
புண்ணியம் — தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ, உணர்ச்சிகளுக்கோ இன்பம் தருவது புண்ணியம்.
பாவம் — தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ, உணர்ச்சிகளுக்கோ துன்பம் தருவது பாவம்.
இந்தப் புண்ணிய பாவங்களை வைத்து தான் ஒழுக்கம் என்ற ஒன்று உருவாகிறது.
ஒழுக்கம் — தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ, உணர்ச்சிகளுக்கோ துன்பம் தராமல் வாழ்வது
வேதாத்திரி மகரிஷி அவர்கள் இரண்டொழுக்க பண்பாடு என்ற ஒன்று வகுத்துள்ளார்கள்.
அது பின்வருமாறு:
நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தர மாட்டேன்.
துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
இந்த இரண்டொழுக்க பண்பாட்டினை நாம் பின்பற்றினாலே பாவங்களைச் செய்யாமல் , புண்ணியங்களைச் செய்து பிறவிப் பெருங்கடலை கடந்து விடலாம்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.-வள்ளுவம்
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். …
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
